இலங்கை போக்குவரத்து சபை (SLTB) ஒப்பந்த அடிப்படையில் சாரதிகள் மற்றும் நடத்துனர்களை ஆட்சேர்ப்பு செய்வதாக அறிவித்துள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் நாடு முழுவதும் உள்ள தகுதியான நபர்களிடமிருந்து கோரப்பட்டுள்ளன.
நாடு முழுவதும் 107 டிப்போக்களில் 25,000 க்கும் மேற்பட்ட ஊழியர்களுடன் தற்போது இயங்கி வரும் பொது போக்குவரத்து சேவையை வலுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான பத்திரிகை விளம்பரம் இன்று வெளியிடப்பட்டது. அதன்படி, சாரதி பதவிக்கு 450 வெற்றிடங்களும் (ஆண்களுக்கு 425, பெண்களுக்கு 25), நடத்துனர் பதவிக்கு 300 வெற்றிடங்களும் (ஆண்களுக்கு 275, பெண்களுக்கு 25) உள்ளன.
விண்ணப்பங்களுக்கான கடைசி திகதி ஜூலை 31, 2025 ஆகும். விண்ணப்பிக்கும் பதவி மற்றும் சம்பந்தப்பட்ட மாகாணம் என்பன உறையின் மேல் இடது மூலையில் தெளிவாகக் குறிப்பிடப்பட வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் நேர்முகப் பரீட்சையின் போது தமது அசல் பாடசாலை விடுப்புச் சான்றிதழ் (மாணவர் முன்னேற்ற அறிக்கை) மற்றும் பிற கல்விச் சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும். முழுமையற்ற அல்லது விதிகளைப் பூர்த்தி செய்யாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என இலங்கை போக்குவரத்து சபை வலியுறுத்தியுள்ளது.