சடுதியாக அதிகரித்த தங்கத்தின் விலை!


நாட்டில் தங்கத்தின் விலை கடந்த வாரத்துடன் ஒப்பிடும் போது சுமார் 10,000 ரூபாய் அதிகரித்துள்ளதாக சந்தை தரவுகள் காட்டுகின்றன.

அதன்படி, இன்று (03.09.2025) காலை கொழும்பு செட்டியார் தெரு தங்க சந்தையில் 22 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 262,700 ஆக அதிகரித்துள்ளது.


கடந்த புதன்கிழமை (27) 22 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 2,52,500 ரூபாயாக காணப்பட்டது.

இதற்கிடையில், கடந்த புதன்கிழமை 2,73,000 ரூபாயாக காணப்பட்ட 24 கெரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை தற்போது 2,84,000 ரூபாயாக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை