வெசாக் வாரத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள மதுபானசாலைகள் இரு நாட்களுக்கு மூடப்படும் என மதுவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.
அரச வெசாக் நிகழ்வை முன்னிட்டு, மே 30,31 ஆகிய இரு நாட்களிலும் மதுபானசாலைகள் மூடப்படும் என மதுவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதேவேளை வெசாக் வாரத்தை முன்னிட்டு, ஜூன் 30,31 மற்றும் 01ஆம் திகதிகளில் நாடு முழுவதும் உள்ள அனைத்து இறைச்சிக் கடைகள் மூடப்படுகின்றது.
அதோடு , இறைச்சி வெட்டும் கூடங்கள், சூதாட்ட நிலையங்கள், கேளிக்கை விடுதிகள் ஆகியவற்றை மூடுமாறு அரச நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவித்துள்ளது.