நெல்லுக்கு நியாயமான விலைகோரி மட்டக்களப்பில் விவசாயிகள் கவனயீர்ப்பு போராட்டம்.!


நெல்லுக்கான விலையை அதிகரிக்குமாறும், நெல் சந்தைப்படுத்தல் சபையூடாக (PMB) நியாயமான விலையில் நெல்லைக் கொள்வனவு செய்ய வலியுறுத்தியும் மட்டக்களப்பில் விவசாயிகள் இன்று(23.06.2026) பாரிய கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.


​மட்டக்களப்பு காந்தி பூங்காவிற்கு முன்பாக ஒன்றிணைந்த மாவட்டத்தின் பல்வேறு பகுதி விவசாயிகளும், சுலோக அட்டைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி அமைதி வழியில் இப்போராட்டத்தை நடத்தினர்.

​தற்போதைய உற்பத்திச் செலவுக்கு ஏற்ப நெல்லின் விலையை அதிகரிக்க வேண்டும்.
​இடைத்தரகர்களின் சுரண்டலைத் தடுக்க, அரசு நெல் சந்தைப்படுத்தல் சபை ஊடாக நேரடியாக நெல்லைக் கொள்வனவு செய்ய வேண்டும்.

​உரம், எரிபொருள் விலை உயர்வால் கடனாளியாக மாறியுள்ள தமக்கு அரசாங்கம் உடனடியாகத் தீர்வு வழங்க வேண்டும் எனவும், தவறின் அடுத்தகட்டமாகப் பாரிய போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாகவும் விவசாயிகள் எச்சரித்துள்ளனர்.
புதியது பழையவை